தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அக்டோபர் 12ஆம் தேதி நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவதைப் பற்றி திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், திருச்சி திருவானைகோவிலில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் கழக பொருளாளர், கழக செய்தி தொடர்பாளர், திருச்சி மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.மனோகரன் தலைமையிலும், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் மற்றும் திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் கே.வி.டி. கலைச்செல்வன் முன்னிலையிலும் நடைபெற்றது.
மேலும் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தை சேர்ந்த மாநில, மாவட்ட, சார்பு அணி, பகுதி, ஒன்றிய, பேரூர், நகர கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment