மணப்பாறையில் ஏ ஐ டி யு சி 103 வது அமைப்பு தினம் கொடி ஏற்று விழா. - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 31 October 2022

மணப்பாறையில் ஏ ஐ டி யு சி 103 வது அமைப்பு தினம் கொடி ஏற்று விழா.

மணப்பாறை அரசு போக்குவரத்துக் கழகம் அலுவலகம்முன்பு,திருச்சி மாவட்ட உள்ளாட்சி தொழிலாளர்கள்  சங்கம் சார்பில்  நகராட்சி அலுவலகம் முன்பும் அமைப்புச்சாரா தொழிலாளர்கள்சங்க செயலாளர் நல்லுச்சாமி இல்லம் அருகிலும்  ஏ ஐ டி யு சி 103 வது  அமைப்பு தினம் கொடி ஏற்று விழாவும் முன்னாள் அகில இந்திய பொது செயலாளர் குருதாஸ் தாஸ்குப்தா வின் மூன்றாம் ஆண்டு  நினைவுதின புகழ் அஞ்சாலியும் நடைபெற்றது.

அரசு போக்குவரத்துக் கழகம் அலுவலகம்முன்பு ஏ ஐ டி யூ சி 103ம் ஆண்டு அமைப்புதின கொடி ஏற்றியும் முன்னாள் அகில இந்திய பொது செயலாளர் குருதாஸ் தாஸ்குப்தா வின்மூன்றாம் ஆண்டு  நினைவுதின புகழ் அஞ்சாலி நிகழ்வுக்கு மாசிமலை தலைமை வகித்தார் மத்திய சங்க செயலாளர் சுப்ரமணியன் கொடி ஏற்றி வைத்து குருதாஸ் தாஸ்குப்தா திருவுருவபடத்திற்கு மலர் துவி புகழ் அஞ்சலி உரை நிகழ்தினார்.


திருச்சி மாவட்ட உள்ளாட்சி தொழிலாளர்கள்  சங்கம் சார்பில்  நகராட்சி அலுவலகம் முன்பும் சங்க செயலாளர் காமாட்சி தலைமை வகித்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் ஜனசக்தி உசேன் கொடி ஏற்றிவைத்து உரை நிகழ்தினார் 


அமைப்புச்சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் விராலிமலை சாலையில் தனியார் திருமண மண்டபம் அருகில்  செயலாளர் நல்லுச்சாமி தலைமையில் அரசு போக்குவரத்துக் கழக கிளை செயலாளர் மாசி மலை கொடி ஏற்றிவைத்தார்.


ஏஐடியூசி  கொடியோற்றி முழக்கமிட்டனர், அனைந்து நிகழ்விலும் கண்ணன்  ஜெயராஜ்  அருனகிரி  ஜெயலெட்சுமி குமார் மாரியம்மாள் செல்லமுத்து மற்றும் சங்க நிர்வாகிகள்  கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad