மணப்பாறை அருகே விஷம் அருந்தி பட்டாதாரி விவசாயி பலி. - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 4 October 2022

மணப்பாறை அருகே விஷம் அருந்தி பட்டாதாரி விவசாயி பலி.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த ஆண்டவர் கோவில் மான்பூண்டி ஆற்றில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக மணப்பாறை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.


அதன்பபேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மணப்பாறை காவல் உதவி ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான காவல்துறையினர் இறந்து கிடந்த நபரை பரிசோதித்து பார்த்தனர்.


அப்போது மேல் சட்டை பாக்கெட்டில் 800 ரூபாய் பணமும்,ஒரு துண்டு சீட்டும் இருந்தது. அதனைத் தொடர்ந்து துண்டு சீட்டில் இருந்த அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விசாரித்ததில் அந்த அலைபேசி எண் இறந்து கிடந்த நபரின் அண்ணனுடையது என்பதும், இறந்த நபர் புதுக்கோட்டை மாவட்டம் கீழகோத்திராப்பட்டியைச் சேர்ந்த ரவி பாஸ்கர் (42) பட்டதாரி ஆசிரியர் எனவும் தற்போது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருவதாகவும்  தெரிய வந்தது.


அதனைத் தொடர்ந்து உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.


மேலும் மூக்கில் நுரை வந்த நிலையில் சடலம் கிடந்ததால் சந்தேகமடைந்த போலீசார் அந்த பகுதியில் ஏதேனும் விஷபாட்டில் உள்ளதா என தேடி பார்த்தனர் அப்போது உடல் கிடந்த இடத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் விஷபாட்டில் கிடந்ததை கைப்பற்றி மேலும்  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இச்சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad