மணப்பாறையில் நேற்று பெய்தமழையால் சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் அவதி. - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 27 May 2023

மணப்பாறையில் நேற்று பெய்தமழையால் சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் அவதி.


சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக மணப்பாறை - திருச்சி சாலை  மேம்பால சுரங்கபாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்களின்பொதுமக்கள் பெரிதும் அவதி, பூனைக்கு மணி கட்டுவது யார்.  இது தான் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை.

எத்தனையோ முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித பலனும் இல்லை. இது அதிகாரிகளின் அலட்சியமே கரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பொதுபணித்துறை அதிகாரிகளிடமும் மற்றும்  நகராட்சி அதிகாரிகளிடம் கூறினாலும்  எந்தவித நடவடிக்கையும் இல்லை ஏன் என்றால் அப்பொது வந்து பார்வையிட்டு செய்து தருகிறேன் என்று கூறுவார்கள் அவ்வளவு தான். அதன் பின்னர் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதிலை. 



மக்கள் நகராட்சி நிர்வாகிகள், பொதுப்பணித்துறை நிர்வாகிகள், கவுன்சிலர் என அலைந்து மனு கொடுத்து நொந்துபோய் உள்ளனர். இதற்கு ஒருவிடிவு காலம் வேண்டும். மேலும் அந்த பகுதியில் தான் மருத்துவமனை உள்ளது. மணப்பாறையில் புகழ் பெற்ற மாட்டு சந்தைக்கு பொதுமக்கள் செல்லவேண்டும் என்றால் அந்த படகியை தான்  வேண்டும். பொது மக்கள் அதிகம் நடமாட கூடிய பகுதி இது,  தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுப்பாரா என்று அப்பகுதிமக்கள் கோரிக்கையாக வைக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad