உப்பிலியபுரம் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம். - தமிழக குரல் - திருச்சிராப்பள்ளி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 9 May 2023

உப்பிலியபுரம் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்.


தமிழக முதல்வர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இரண்டு ஆண்டுகளில் தமிழகத்திற்கு செய்து கொண்டிருக்கும் திராவிட மாடல் ஆட்சியின் மக்கள் நல திட்டங்கள் குறித்தும் சாதனைகள் குறித்தும் திராவிட முன்னேற்றக் கழகத்தினரால் முதல்வர் தலைமையில் தமிழக முழுவதும் சாதனை விளக்க பொதுக் கூட்டங்கள் நடைபெற்ற வரும் வேளையில் திமுக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு வழிகாட்டுதல்படி, வடக்கு மாவட்ட செயலாளர் எம்எல்ஏ ந.தியாகராஜன் ஆலோசனைப் படி திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் தெற்கு ஒன்றியம் திமுக சார்பில் தெற்கு ஒன்றிய செயலாளர் அர.ந.அசோகன் தலைமையில் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் துறையூர் அருகே எரகுடி பேருந்து நிலையம் கலைஞர் திடலில் மிக பிரம்மாண்டமான முறையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் நடைபெற்றது.


நிகழ்விற்கு தலைமை தாங்கி திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை விளக்கி கூறினார் தெற்கு ஒன்றிய செயலாளர் அசோகன், "அப்போது அவர் கூறியதாவது திராவிட மாடல் ஆட்சி இரண்டு ஆண்டு மட்டுமல்ல முத்தமிழ் அறிஞர் கலைஞர் தலைமையில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தை தலைநிமிர செய்த கட்சியாகும். அதேவேளை இந்த இரண்டு ஆண்டு மட்டும் அல்ல 100  ஆண்டுக்கும் மேலாகவும்  திமுக தலைவர் முதல்வர் தளபதி தலைமையிலான அரசு தமிழகத்திற்கு பல நல் திட்டங்களை செய்து கொண்டே இருக்கும் எனவும் சிறப்புரையாற்றினார்.


நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக திமுக தலைமை செய்தி தொடர்பு இணைச் செயலாளர் கவிஞர் சல்மா கலந்து கொண்டு திராவிட மாடல் ஆட்சியின் எண்ணற்ற சாதனைகளை பொதுமக்களுக்கு விளக்கி கூறினார். நிகழ்விற்கு முன்னிலை வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வன், பா.கி.பட்டி பேரூர் செயலாளர் வெள்ளையன், பேரூர் நகர செயலாளர் நடராஜ், அவைத் தலைவர் காத்தமுத்து, துணைச் செயலாளர்கள் தனபால், விஜயா பாலு, பொருளாளர் வீரமலை, மாவட்ட பிரதிநிதிகள் அசோக் ராஜ், கே.சுப்பிரமணியன் ராமதாஸ், வாழ்த்துரை மாவட்டத் துணைச் செயலாளர் கனகராஜ், மாவட்ட கவுன்சிலர்கள் தீபாசின்ராஜ், தமயந்திபிரபு, ஆகியோர் முன்னதாக நிகழ்விற்கு எரகுடி தெற்கு ஒன்றியம் கிளைக் செயலாளர் எம்.ஜி. பாலசுப்பிரமணியன்  வரவேற்புரை அளித்தார்.



உப்பிலியபுரம் ஒன்றிய கவுன்சிலர்கள், வடக்கு ஒன்றிய நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், பேரூர் நிர்வாகிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள் பாலகிருஷ்ணம்பட்டி பேரூர் நிர்வாகிகள் பேரூராட்சி கவுன்சிலர்கள், தொமுச நிர்வாகிகள், உப்பிலியபுரம் இளைஞர் அணியினர், எரகுடி ஊராட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


நிகழ்விற்கு வருகை புரிந்து நிகழ்ச்சியினை மிக சிறப்பாக நடத்திக் கொடுத்த அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் அதே வேளை நிகழ்ச்சியினை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்தவர்களுக்கும் கலந்து கொண்ட பொதுமக்களுக்கும் உப்பிலியபுரம் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என நன்றியுரை வாசித்தார் ஒன்றிய துணைச் செயலாளர் அறிவொளி கு. சுப்பிரமணியன், உப்பிலியபுரம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளராக பொறுப்பேற்று தான் தலைமையேற்று நடத்திய முதல் கூட்டமே திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் என்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி அதேவேளை மறக்க முடியாத நிகழ்ச்சி எனவும் வாய்ப்பளித்த கழக தலைவர் தளபதி முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும், தலைமை கழகத்திற்கும், மலைக்கோட்டை மன்னவர் கழக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே என் நேரு அவர்களுக்கும், வடக்கு மாவட்ட செயலாளர் எம்எல்ஏ காடுவெட்டி ந. தியாகராஜன் அவர்களுக்கும்,வருகை புரிந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும், பொது மக்களுக்கும், நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார் அசோகன்.

No comments:

Post a Comment

Post Top Ad